2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்.. ராம்தேவ் பரபர பேச்சு
அலிகார்: எந்த மதத்தவராயினும் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
அலிகாரில் நடந்த நிகழ்ச்சியின்போது இவ்வாறு கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ராம்தேவ். இதுகுறித்து அவர் பேசியதாவது: இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவராக இருந்தால் அவர்களின் வாக்கு உரிமையை அரசு பறிக்க வேண்டும். நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அவர் பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்..

நாளுக்கு நாள் பெருகி வரும் நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நாம் இருவர் நமக்கு இருவர் என்று வாழும் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பு வேலை வாய்ப்புத் தகுதி, மருத்துவ சிகிச்சை, கல்வி வசதி, வாக்கு உரிமை என்று அரசு சலுகைகள் அளிக்க முன் வர வேண்டும். அப்படி இல்லாமல், இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இவை மறுக்கப்பட வேண்டும்.
மக்கள் நினைத்தால் மட்டுமே, மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.52 வயதுக்கு முன்னராக திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு சிறப்புத் தகுதி, சலுகைகள் வழங்க வேண்டும். 2050ம் ஆண்டு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என்கிற கணிப்பு உள்ளது.
இதை உண்மையாக்க இந்தத் திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.1997 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமது பதஞ்சலி நிறுவனம், மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி நடைப்போட்டுக் கொண்டு இருப்பதாகவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
ராம்தேவ் மட்டுமல்ல சமீபகாலமாக சில பாஜக தலைவர்களும் கூட 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது. பாபா ராம்தேவின் பேச்சால் சலசலப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications