2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்.. ராம்தேவ் பரபர பேச்சு
அலிகார்: எந்த மதத்தவராயினும் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
அலிகாரில் நடந்த நிகழ்ச்சியின்போது இவ்வாறு கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ராம்தேவ். இதுகுறித்து அவர் பேசியதாவது: இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவராக இருந்தால் அவர்களின் வாக்கு உரிமையை அரசு பறிக்க வேண்டும். நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அவர் பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்..

நாளுக்கு நாள் பெருகி வரும் நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நாம் இருவர் நமக்கு இருவர் என்று வாழும் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பு வேலை வாய்ப்புத் தகுதி, மருத்துவ சிகிச்சை, கல்வி வசதி, வாக்கு உரிமை என்று அரசு சலுகைகள் அளிக்க முன் வர வேண்டும். அப்படி இல்லாமல், இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இவை மறுக்கப்பட வேண்டும்.
மக்கள் நினைத்தால் மட்டுமே, மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.52 வயதுக்கு முன்னராக திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு சிறப்புத் தகுதி, சலுகைகள் வழங்க வேண்டும். 2050ம் ஆண்டு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என்கிற கணிப்பு உள்ளது.
இதை உண்மையாக்க இந்தத் திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.1997 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமது பதஞ்சலி நிறுவனம், மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி நடைப்போட்டுக் கொண்டு இருப்பதாகவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
ராம்தேவ் மட்டுமல்ல சமீபகாலமாக சில பாஜக தலைவர்களும் கூட 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது. பாபா ராம்தேவின் பேச்சால் சலசலப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications