கோல்ப் மட்டை, கத்தியை பயன்படுத்தி மகள் ஆருஷியை கொன்ற பெற்றோர்: சி.பி.ஐ. தகவல்
காசியாபாத்: ஆருஷியை அவளது பெற்றோரே கோல்ப் மட்டை மற்றும் சமையலறைக் கத்தியைப் பயன்படுத்திக் கொன்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள வீட்டில் டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மகள் ஆருஷி தல்வார் மற்றும் அவர்களது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இரு கொலைகளையும் செய்ததாக டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வலுவான ஆதாரங்கள்....
இந்தக் கொலைகளை டாக்டர் ராஜேஷ் தல்வாரும், அவரது மனைவி நூபுர் தல்வாரும் தான் இணைந்து செய்துள்ளனர் என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த வாதத்தின் போது முன் வைத்துள்ளது சிபிஐ.

இண்டர்நெட் ஆதாரம்....
அதில், கொலை நடந்த அன்று இரவு அவரது அறையில் இன்டர்நெட்டை பயன்படுத்தியதற்கான ஆதாரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சி.பி.ஐ.

ஒரே அறையில்...
ஆருஷி கொலை செய்யப் பட்ட அறையிலேயே ஹேம்ராஜும் கொல்லப்பட்டதாகவும், பின்னர் தடயங்களை அழிக்கும் முயற்சியில் டாக்டர் தம்பதியர் ஈடுபட்டது உறுதியாகியிருக்கிறது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கோல்ப் மட்டை....
மேலும், கோல்ப் மட்டை மற்றும் சமையலறை கத்தியை பயன்படுத்தி தல்வார் தம்பதியர் ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்திருப்பதாக சி.பி.ஐ. முடிவுக்கு வந்துள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.

தடயங்கள் அழிப்பு....
ஆருஷியை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரை தனது செல்வாக்கைப் பயன் படுத்தி தவறாக சான்றிதழ் தர முயற்சி செய்ததாகவும், ஹேம்ராஜ் உடலை மாடிக்கு கொண்டு செல்லும் போது, மாடிப்படிகளில் சிந்திய ரத்தக்கரை கழுவி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications