சீமாந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்... முதல்வராகிறார் நாயுடு
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது..
இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் 175 இடங்களைக் கொண்ட ஆந்திராவில் 106 தொகுதிகளில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளது தெலுங்குதேசம். இது கடந்த தேர்தலை விட அக்கட்சிக்கு 53 இடங்களைக் கூடுதலாக பிடித்துள்ளது தெலுங்குதேசம்.
ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு சட்டசபையில் 2வது இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. தற்போதைய சட்டசபையில் இக்கட்சிக்கு 105 இடங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கின்றன.
மறைந்த ராஜசேகர ரெட்டியிடம் ஆட்சியைப் பறி கொடுத்த சந்திரபாபு தற்போது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளார்.