கைநரம்பை அறுத்துவிட்டு சாகப் போகிறேன் என ஃபேஸ்புக்கில் தெரிவித்த சாப்ட்வேர் என்ஜினியர்
குர்காவ்ன்: குர்காவ்னில் தற்கொலை செய்யப் போவதாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட சாப்ட்வேர் என்ஜினியரை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
குர்காவ்னை சேர்ந்தவர் வருண் மாலிக்(30). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் நேற்று தனது கை நரம்பை கத்தியால் கிழித்துக் கொண்டு அதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டார்.
ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்ததாவது,

வருண் மாலிக்காகிய நான் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பு அல்ல. எனக்கு யாரும் இல்லை. தனிமையில் உள்ளேன். வாழ்வை முடித்துக் கொள்வது தான் ஒரே வழி என்று தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது வருண் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,
வருண் தனது கை நரம்பை அறுத்து அதை வீடியோ மூலம் தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். அவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த அவரின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவர் மனமுடைந்து இருந்துள்ளார்.
வருண் ஓய்வு பெற்ற அவரின் தந்தையுடன் வசித்து வருகிறார் என்றனர்.
வருண் ஃபேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ் தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications