தெலங்கானாவில் இன்ஜினியரிங்-மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக்.. 3 பேர் கைது
ஹைதராபாத்: தெலங்கானாவில், இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் மருத்துவ பொது நுழைவு தேர்வு (EAMCET)-II வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் மூன்று நபர்களை சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த வினாத்தாள் லீக் தொடர்பாக சிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், டெல்லியில், வினாத்தாள் பிரிண்ட் செய்யப்பட்ட இடத்திலேயே இவ்வாறு லீக் செய்யப்பட்டது அம்பலமானது.

69 மாணவர்கள் பணம் செலுத்தி இந்த லீக் வினாத்தாள்களை பெற்றுள்ளனர். தலா ரூ.40 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை அவர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. முதலில் அட்வான்சாக குறிப்பிட்ட தொகையை மட்டும் பெற்றுள்ளனர்.
இந்த மோசடியின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி அளவுக்கு இருக்கும் என்கிறது சிஐடி. இதனிடையே தேர்வை ரத்து செய்வவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. நன்கு படித்து தேர்வெழுதிய மாணவர்கள் இவ்வாறு ரத்து செய்வதை எதிர்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications