ஆந்திராவில் ராஜினாமா படலம் தொடங்கியது- முதல்வர் கிரண்குமார் நாளை பதவி விலகுகிறார்!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தொடங்கியுள்ளனர். முதல்வர் கிரண்குமார் ரெட்டி நாளை ராஜினாமா செய்ய உள்ளார்.

தெலுங்கானா தனி மாநில மசோதா கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் இன்று நிறைவேறியது. லோக்சபா நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு தெலுங்கானா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு சீமாந்திரா எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அமைச்சர்கள் ஜி. கண்டா சீனிவாஸ் ராவ், ஈரசு பிரதாப் ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி நாளை தமது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
பந்த்
இதனிடையே தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். லோக்சபாவில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டு தெலுங்கானா மசோதா நிறைவேற்றியது ஒரு கறுப்பு தினம் என்றும் அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications