ஓய்வுக்குப் பின்... டெண்டுல்கர் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற கூட்டம்
டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன்முறையாக இன்று ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்டார் சச்சின் டெண்டுல்கர்.
சமீபத்தில் நடைபெற்ற போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சமூக சேவையில் இறங்கினார்.
அதன்படி, ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் சச்சின். ‘சுத்தமான கழிவறை; அழுக்கற்ற தூய்மையான கைகள்' என்ற நோக்கத்தோடு செயல்படும் இந்த அமைப்பின் சார்பில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறார் சச்சின்.
இந்நிலையில், நடந்து கொண்டிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார் சச்சின்.

வணக்கம்....
தனது இருக்கைக்கு சென்று அமர்ந்த அவருக்கு, எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் தங்களது வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

வாழ்த்து....
கூட்டம் தொடங்கியதும், நாடாளுமன்றத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, சச்சினுக்கு வழங்கப் பட உள்ள பாரத ரத்னா விருதுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது.

நன்றி....
உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தந்த வாழ்த்துச் செய்திக்கு பதில் மரியாதை தரும் விதமாக எழுந்து நின்று கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தார் சச்சின்.

ஆட்டோகிராப்...
அதன் பிறகு, சபை ஒத்தி வைக்கப் பட்டது. அந்தநேரத்தில் எழுந்து வந்த அவை உறுப்பினர்கள் வரிசையில் நின்று தங்களது வாழ்த்தை நேரடியாக கை குலுக்கி சச்சினுக்குத் தெரிவித்தனர். சிலர் ஆட்டோகிராப்பும் பெற்றுச் சென்றனர்.

புன்னகையோடு நன்றி...
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் புன்னகை தவழும் முகத்தோடு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் சச்சின்.

ஓய்வுக்குப் பின்...
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டார் சச்சின். ஆனபோதும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல காரணமான.. 5 ஹீரோக்கள் இவர்கள்தான்! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications