காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் 17 ராணுவத்தினர் பலி.. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை #uriattack
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட அவர்களால் நமது தரப்பில் 17 ராணுவத்தினர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் சமீப காலத்தில் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த அளவுக்கு மிகப் பெரியஉயிர்ப் பலியை தீவிரவாதிகள் சமீபகாலத்தில் முதல் முறையாக இன்று ஏற்படுத்தி விட்டது இந்தியாவை அதிர வைத்துள்ளது.

எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள ராணுவத் தலைமையகம்தான் தாக்குதலுக்குள்ளானது. அங்கு 3 முதல் 4 தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் தீவிர துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். இரு தரப்புக்கும் இடையே அதிரடி சண்டை நடந்தது. தீவிரவாதிகள் கையெறி குண்டுகளையும் வீசித் தாக்கினர். இதில் ராணுவத் தரப்பில் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையி்ல்தான் தாக்குதலில் 17 ராணுவத்தினர் கொல்லப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. இது பாதுகாப்புப் படையினரை அதிர வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதலில் சிக்கிய ராணுவ தலைமையகமானது பாரமுல்லா மாவட்டத்தில், ஸ்ரீநகர் - முசாபரபாத் நெடுஞ்சாலையில் உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்கினர்.
தாக்குதல் குறித்து டிவிட்டரில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் எனது ரஷ்ய மற்றும் அமெரிக்க பயணங்களைத் தள்ளிவைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர், முதல்வருடன் பேசினேன். காஷ்மீர் நிலைமை குறித்து என்னிடம் அவர்கள் விளக்கினர் என்று கூறியிருந்தார் ராஜ்நாத் சிங்
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications