ஆசியப் பெண்களே... உங்க பொட்டுல “அயோடின்” இருக்கா?
டெல்லி: ஆசியப் பெண்களின் அயோடின் குறைபாட்டை போக்கும் வகையில், உயிர் காக்கும் பொட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
காய்டர் எனும் முன் கழுத்துக் கழலை நோய் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து உலகின் பல நாடுகளில் அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
ஆண்களைக் காட்டிலும் அதிகளவில் பெண்களே அயோடின் குறைபாட்டால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ரத்தச்சோகையில் துவங்கி, மார்பக நோய்கள், புற்றுநோய் மற்றும் பிரசவத்தின் போது உயிரிழப்பு என அயோடின் பாதிப்பால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்.

அயோடின் குறைபாடு...
வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அயோடின் கலந்த உப்பு மற்றும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், கிராமங்கள் நிறைந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான் அயோடின் குறைபாட்டால் அதிகளவில் பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

உயிர் காக்கும் பொட்டு...
எனவே, இத்தகைய பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, எளிய முறையில் அயோடின் குறைபாட்டை போக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நீல்வசந்த் மருத்துவ மற்றும் ஆய்வு கழகம் என்ற இந்திய நிறுவனமும், சிங்கப்பூரின் கெய் விளம்பர குழுமமும் இணைந்து "உயிர் காக்கும் பொட்டு" ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

ஸ்டிக்கர் பொட்டு வடிவில்...
இந்த உயிர் காக்கும் பொட்டு பெண்கள் நெற்றியில் அணியும் ஸ்டிக்கர் பொட்டு வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நெற்றியில்-புருவத்தின் மையப்பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த பொட்டில் கலந்திருக்கும் அயோடின், அவர்களின் தோல் வழியாக உடல் முழுவதும் பரவி, அதன் மூலம் தினசரி வாழ்வில் அவர்களுக்கு தேவையான அயோடின் சத்தினை அளிக்கிறது.

மருத்துவ முகாம்கள்...
இந்த அயோடின் பொட்டுக்கள் ஊட்டசத்து குறைபாடு நிறைந்த பெண்கள் வசிக்கும் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்கள் நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாத்திரைகளுக்கு பதிலாக இந்தப் பொட்டுகள் வழங்கப் படுகின்றன.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த பொட்டுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. அனைவரிடமும் அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரமாக இதனை நினைப்பதாக இந்த பிரத்யேக பொட்டினை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications