பட்ஜெட்டில் எங்கள் திட்டங்களை பாஜக காப்பியடித்துவிட்டது: சோனியா காந்தி
டெல்லி: பாஜக அரசின் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சாதகமான அம்சங்கள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கருத்து கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்கள் பலவற்றினை பாஜக நிதியமைச்சர் காப்பியடித்துள்ளார் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
2014-15ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சோனியா காந்தி
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி "பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை. எங்களுடைய திட்டங்களையே அவர்கள் தொடர்கின்றனர். சமூக துறைகளுக்கு மிக குறைந்த அளவிலே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொழிலதிபர்களுக்கு சாதகம்
இது தொழிலதிபர்களுக்கான பட்ஜெட், சாதாரண மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

இல்லாத பட்ஜெட்
நாட்டின் வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே பட்ஜெட் போல இந்த பட்ஜெட்டும் இல்லாத பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி
பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் மேலும் வளர்ச்சி கீழ்நோக்கியே செல்லும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அம்பானி, அதானி பட்ஜெட்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. நவாப் மாலிக் கருத்து கூறுகையில் இந்த பட்ஜெட் அதானி மற்றும் அம்பானிக்கு சாதகமாக அமையுமே தவிர சாதாரண மக்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications