'இந்து தீவிரவாதம்' என்போர் தேச விரோதிகள்... மன்னிப்பே கிடையாது! - உபி முதல்வர் அதிரடி
Recommended Video

லக்னோ: இந்து தீவிரவாதம் என்று பேசி தங்கள் அறிவுஜீவித்தனத்தை பணம் பண்ண நினைப்பவர்கள் தேச விரோதிகள். அந்நிய நாட்டு கைக்கூலிகள், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
இந்து வலதுசாரிகளில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என நடிகர் கமல் ஹாஸன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது மதச் சார்புடைய தலைவர்கள், பிரமுகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கமல் ஹாஸனுக்கு எதிராக அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
வாரணாசி, லக்னோ, சென்னை நீதிமன்றங்களில், கமிஷனர் அலுவலகங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கமல் ஹாஸன் கருத்துக்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

தேச விரோதிகள்
லக்னோவில் அவர் பேசுகையில், "பிரபலங்கள் என்ற பெயரில் இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுபவர்கள் தேச விரோதிகள். நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்றெல்லாம் கூறி தங்கள் அறிவுஜீவித்தனத்தை வைத்து பணம் பண்ணுபவர்கள். இவர்கள் இந்து தீவிரவாதம் பேசி தங்கள் பிழைப்பை நடத்தும் அந்நிய நாட்டுக் கைக் கூலிகள்.

சனாதன தர்மம்
இந்த நாட்டின் மக்கள் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
சனாதன தர்மம்தான் இந்த நாட்டின் ஒரே மதம். மற்றவை எல்லாம் வெவ்வேறு கலாச்சாரம், நம்பிக்கையின் தொடர்ச்சி.
மதச்சார்பின்மை என்ற ஒன்றே இந்த நாட்டில் கிடையாது. இந்த சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பொய் அது.

தேசம் பெரிது
அவரவர் மதம், கலாச்சாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் விட தேசம் பெரியது. இந்து தீவிரவாதம், மதச் சார்பின்மை என்று கூறி, தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள, இந்த நாட்டுக்கு துரோகம் செய்ய அனுமதிக்க முடியாது.
இந்துத்துவம் என்பது ஒரு கலாச்சாரம், வாழ்க்கை நெறிமுறை. இந்த இந்து நாடுதான் முஸ்லிம்கள், ஜொராஷ்டிரர்கள், கிறித்துவர்கள், யூதர்கள் மற்றும் பல மதத்தவர்களுக்கு வாழ இடமளித்திருக்கிறது.

அனுமதிக்க முடியாது
சகிப்புத்தன்மையை உலகுக்குத் தந்தது இந்தியா. அனைத்து மதங்களையும் நாம் மதிக்கிறோம். ஆனால் அதற்காக யார் வேண்டுமானாலும் இந்து தீவிரவாதம் என பேச அனுமதிக்க முடியாது. ஒருவரின் மத நம்பிக்கைகளை இன்னொருவர் மீது திணிக்க முடியாது. பூணூல் அணியாவிட்டாலும் குடுமி இல்லாவிட்டாலும் ஒரு பிராமணர் பிராமணர்தான்," என்றார்.
-
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்?












Click it and Unblock the Notifications