குஜராத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தகுதி-50%; காங்கிரஸுக்கு- 44% : டைம்ஸ் நவ் சர்வே
குஜராத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தகுதி உள்ளதாக 50% பேரும் காங்கிரஸுக்கு தகுதி உள்ளது என 44% பேரும் தெரிவித்துள்ளனனர் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.
டெல்லி: குஜராத்தில் அடுத்த மாதம் மாநில தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய இந்த கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி அமையும் என அதிக பேர் வாக்களித்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன என தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி கூறினார்.
இந்த நிலையில் தற்போது அந்த தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய இந்த பெரிய அளவிலான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியள்ளது.
இதன்படி பலரிடம் குஜராத்தில் மீண்டும் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதன்படி குஜராத்தில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தகுதி என்று 50% பேர் கூறியுள்ளனர்.
அதேபோல் குஜராத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு தகுதி என்று 44% என பேர் கூறியுள்ளனர். இந்த கருத்து கணிப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications