ஆந்திராவில் உழவர் சந்தையில் 2 கி.மீ. தூரம் வரிசையில் நின்ற மக்கள்.. ஏன் என்னாச்சு?
அமராவதி: ஆந்திராவில் கிலோ தக்காளி ரூ 50 க்கு விவசாயி ஒருவர் விற்பனை செய்ததால் அதை வாங்க 2 கிலோ மீட்டர் வரிசையில் பொதுமக்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் ரூ 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60 முதல் 80 க்கு விற்பனையாகிறது. எனினும் தக்காளி விலை குறைந்தபாடில்லை.
தக்காளி விளைச்சல் செய்யும் விவசாயிகள் இன்று பலர் கோடீஸ்வரர்களாகவும் லட்சாதிபதிகளாகவும் ஆகியுள்ளனர். அதே நேரத்தில் விலை குறைந்து தக்காளி விற்கப்படும் போது போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்ததையும் மறுக்க முடியாது.
20 நாட்களில் 30 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த ஆந்திரா விவசாயி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று விவசாயி ஒருவர் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தார். அவர் ஒரு கிலோ தக்காளி ரூ 50 க்கு என கூவி கூவி அழைத்தார்.
உடனே வேறு கடைகளுக்கு தக்காளி வாங்கச் சென்றவர்கள் அந்த விவசாயியின் கடைக்கு ஓடி வந்தனர். பின்னர் வரிசையில் நிற்குமாறு கூறியதை அடுத்து அவர்கள் வரிசையில் நின்றனர். அப்போது 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தக்காளி வாங்கிச் சென்றனர்.
அதிகளவு மக்கள் வந்ததால் ஒருவருக்கு 3 கிலோ தக்காளிகளை விவசாயி வழங்கினார். உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி வாங்க அந்த பகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிலோ 50 ரூபாய் என அவர் கொண்டுவந்த அனைத்து தக்காளிகளையும் விற்றுவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications