"லூஸ்"ல போய் "கிங்ஸ்" கேட்டா இனிமே "கடைக்கார்" தர மாட்டார்!
டெல்லி: சிகரெட் விற்பனையில் கடும் கிடுக்கிப்பிடியைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடுமையான புகையிலை கொள்கையை மத்திய அரசு வகுக்கவுள்ளது.
இதுதொடர்பான செய்தி இன்று வெளியானதுமே புகையிலை நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் சிகரெட்டின் சில்லறை விற்பனையைத் தடை செய்யக் கோரி முக்கியமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது கடைகளில் இனிமேல் ஒரு சிகரெட், அரை பாக்கெட் சிகரெட் என்று வாங்க முடியாது. பாக்கெட் பாக்கெட்டாகத்தான் விற்கப் போகிறார்களாம்.

மேலும் புகை பிடிப்போருக்கு வயது நிர்ணயம் செய்யவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், சிகரெட் விற்பனை மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தை மீறும் வகையில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை பெரிய அளவில் உயர்த்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக இன்று ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பதிலளிக்கையில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான வரைவு அமைச்சரவைக் குறிப்பும் தயாரிக்கப்பட்டு ஆலோசனைக்காக சுற்றில் விடப்பட்டுள்ளது என்றார்.
இந்த பரிந்துரைகள் தற்போது அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தப் பரிந்துரைகள் அமலாக்கப்படும்.
கடைகளில் தற்போது சில்லறையாக சிகரெட் வாங்குவதே அதிகம் உள்ளது. தற்போது 10 சிகரெட்கள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ. 100க்கு அதிகமாகத்தான் உள்ளது. இதனால் பலர் அரை பாக்கெட் அல்லது 2, 2 சிகரெட்டாக வாங்கி ஊதித் தள்ளுகிறார்கள். இதற்குத்தான் முதலில் ஆப்பு வைக்கப் போகிறது மத்திய அரசு.
இந்த உத்தரவுகள் சட்டமாகி அமலுக்கு வந்தால் சிகரெட் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும் என்று தெரிகிறது. சிகரெட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ. 25,000 கோடி அளவுக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 100 பில்லியன் சிகரெட்களை வாங்கி புகையாளர்கள் ஊதித் தள்ளியுள்ளனர் என்று ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு கூறியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications