பீகாரில் பெரும் சோகம்! ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி பலி.. ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது துயரம்
பாட்னா: பீகாரில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் நலனுக்காக மூன்று நாள் விரதம் இருக்கும் ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது நீரில் மூழ்கி 22 பேர் பலியாகியிருப்பது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் ஐப்பசி மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை இந்துகளால் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்துக்களாலும் இந்த பண்டிகை கொண்டாப்படுகிறது. ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நோன்பு இருப்பார்கள்.

மூன்று நாள் நோன்பு முடிவில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் விரதத்தை பெண்கள் முடிப்பார்கள். இந்த பண்டிகையின் போது நீர் நிலைகளில் நீராடி பெண்கள் 24 பேர் பலியாகினர். ஒரே நாளில் பீகாரில் வெவ்வேறு இடங்களில் என மொத்தம் 24 பேர் பலியானது அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் போஜ்பூரில் 15 மற்றும் 20 வயதே ஆன இரண்டு இளம் பெண்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
ஆற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்து நீரில் சிறுமி அடித்து செல்லப்பட சிறுமியை காப்பற்ற ஆற்றில் குதித்த இளம்பெண்ணும் பலியானார். இதேபோல பீகாரின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மொத்தம் 24 பேர் ஒருநாளில் பலியாகியுள்ளனர். இது குறித்து பீகார் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டிருப்பதாவது:-
"போஜ்பூரில் ஐந்து பேரும், ஜெகன்பாத்தில் 4 பேரும், பாட்னா மற்றும் ரோகத்ஸ் பகுதிகளில் தலா மூன்று பேரும் தர்பங்கா மர்ரும் நவடா ஆகிய மாவட்டங்களில் இரண்டு பேரும் கைமுமர், மதேபுரா மற்றும் அவுரங்கபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 22 பேர் ஒரே நாளில் பலியாகினர். உயிரிழப்பு தொடர்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், பலியனவர்களின் குடும்பத்தினருக்கு ரு. 4 லட்சம் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications