தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்ட பஸ்களால் பெங்களூரு பயணிகள் அவதி!
பெங்களூரு: தமிழகம்-பெங்களூரு நடுவேயான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர்கள் நடந்து இரு மாநில எல்லைகளையும் மக்கள் கடந்தனர்.

மேகதாது பகுதியில் கர்நாடகம் அணை கட்டுவதை கண்டித்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. எனவே, கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. பந்த் மீதான கோபத்தால், தமிழக பஸ்கள் மீது கர்நாடகாவில் தாக்குதல் நடந்துவிடலாம் என்ற அச்சத்தால், தமிழக பஸ்களும், கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
எனவே, ஒசூர்-பெங்களூரு எல்லையான ஜுஜுவாடியில், பெங்களூரு செல்லும் தமிழக பஸ்களும், கர்நாடகாவில் இருந்து தமிழகம் செல்லும் கர்நாடக பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால், எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று அடுத்த மாநிலத்திற்குள் செல்ல வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது.
கர்நாடக எல்லையில் இறங்கும், பயணிகள், நடந்தே தமிழக எல்லைக்கு வந்து தமிழக பஸ்களில் போக வேண்டிய ஊர்களுக்கு கிளம்பினர். அதேபோல பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் கர்நாடக எல்லைக்குள் நடந்து சென்று கர்நாடக பஸ்களில் ஏறி பெங்களூரு வந்தனர்.
பெங்களூருவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், வீக் என்ட் காரணமாக, நேற்றிரவே தங்கள் ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அவர்களில் பெரும்பாலானோர் இன்று தப்பினர். மா்லையில் இருந்து பஸ்கள் வழக்கம்போல இயங்க தொடங்கின.












Click it and Unblock the Notifications