நேற்று சென்னை.. இன்று அந்தமான் அருகே வங்கக் கடலில் மீண்டும் நிலஅதிர்வு.. பீதியில் கடலோரவாசிகள்!
டெல்லி: வங்க கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் மூங்கில் பிளாட் உள்ளது. இந்த நகரம் மாநகராட்சி இல்லாத போதிலும் ஏராளமான மக்கள்தொகை இருக்கின்றனர்.
இங்கு இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நில அதிர்வால் எந்தவித பொருட் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்கிற போதிலும் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

பீதி
சென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

நில அதிர்வு மையம்
சென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

லேசான நில அதிர்வு
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்தது. எனினும் இதனால் கடலோர மாவட்ட மக்கள் அதிர்ந்துள்ளனர்.

கடலோர மாவட்டங்கள்
இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்தது. எனினும் இதனால் கடலோர மாவட்ட மக்கள் அதிர்ந்துள்ளனர்.

பெருமூச்சு
இதுபோன்று சென்னையில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுவது வதந்தி என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் வெளியூரில் வசிக்கும் சென்னைவாசிகளின் சொந்த பந்தங்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.












Click it and Unblock the Notifications