'லிப்ஸ்டிக்' வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியில் துருக்கி விமானம் அவசர தரையிறக்கம்!
டெல்லி: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டலை தொடர்ந்து டெல்லி ஏர்போர்ட்டில் விமானம் சல்லடையாக சோதித்து பார்க்கப்பட்டது.
பேங்காக்கில் இருந்து 148 பயணிகளை ஏற்றிக்கொண்டு, இஸ்தான்புல்லுக்கு இன்று மதியம், தர்கிஷ்ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், "இந்த விமானத்தின், சரக்கு வைக்கும் பகுதியில் வெடிகுண்டு உள்ளது" என்று விமான பாத்ரூம் கண்ணாடியில், லிப்ஸ்டிக்கில் யாரோ எழுதிவைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் பைலட்டுக்கு கிடைத்ததும், அவர் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக, அருகிலுள்ள விமான நிலையம் எதுவென பார்த்து விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டெல்லி விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி, அங்கு தரையிறக்க அனுமதி பெறப்பட்டது. எனவே விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் கட்டுப்பாட்டின்கீழ், விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சல்லடை போட்டு விமானத்தை சோதித்து பார்த்தனர். ஆனால், குண்டு கிடைக்கவில்லை. எனவே, பீதி கிளப்ப விஷமி யாரோ இதுபோல எழுதி வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
பயணிகள் அத்தனை பேரிடமும் பாதுகாப்பு அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தபோதிலும், விபரம் கிடைக்கவில்லை. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம் -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications