தலாய்லாமாவை கொல்ல சதித்திட்டம்? புத்தகயாவில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
புத்த கயாவில் தலாய்லமா தங்கியிருந்த இடம் அருகே 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பீகார்: தலாய் லமாதங்கியிருக்கும் புத்தகயா கோவிலில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் இந்த புத்த கயாஉள்ளது. திபெத்திய மத தலைவர் தலாய்லமா, இங்குதற்போது தங்கிதனது ஆன்மீக பணிகளை தொடர்ந்து வருகிறார். நேற்று தன்னுடைய தினப்பணிகளை முடித்து விட்டு இரவு அவர் தனதுஅறைக்கு சென்றநிலையில், அவரின் அறைக்கு அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, மேலும் வெடிகுண்டுகள் உள்ளதா என புத்தகயா முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
புத்த மதத்தின் மிகவும் புகழ்பெற்ற புனிததலமாக புத்தகயா திகழ்கிறது இங்கு கடந்த2013 ஆம் ஆண்டு ஜூலைமாதம் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆலயத்தின் வளாகத்தில் 10 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது தலாய்லாமாவை குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே சீனா தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசைமிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.