குடிகார பெண் வக்கீல் ஓட்டிய கார் மோதி 2 பேர் பரிதாப பலி
மும்பை: மும்பையில் குடிபோதையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கார் ஓட்டி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுளனர்.
மும்பையை சேர்ந்தவர் ஜானவி கட்கர். இவர் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார்.

இவர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மும்பை செம்பூர்-ஆர்.சி.எப். பகுதியில் கார் ஓட்டி வந்தார். இந்நிலையில் தாறு மாறாக ஓடிய அவரது கார் எதிரே வந்த ஒரு டாக்சி மீது மோதியது.
அதை டிரைவர் முகமது உசேன் ஓட்டி வந்தார். அந்த டாக்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிவாண்டியில் இருந்து திரும்பி கொண்டிருந்தனர்.
தேர்வில் வெற்றி பெற்ற அவர்களது மகனுக்கு விருந்தளித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். இந்த விபத்தில் டாக்சி டிரைவர் முகமது உசேன் மற்றும் அதில் பயணம் செய்த முகமது சலீம் சபூவாலா ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் இவ்விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்த போலீசாரின் விசாரணையில் பெண் வழக்கறிஞர் ஜானவா கட்கர் மது அருந்தி இருந்ததாகவும், போதையுடன் கார் ஓட்டியதும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications