For Daily Alerts
Just In
நாகாலாந்தில் கிறிஸ்துவ கல்வி மைய வளாகத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் உட்பட 2 பேர் பலி..
கோஹிமா : கிறிஸ்துவ கல்வி மையத்தில் நேற்று மாலை திடீர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த கல்வி மையத்தின் ஊழியர் உட்பட இரண்டு பேர் பலியாகினர்.
திமாபூரில் உள்ள கிறிஸ்தவ சுகாதார அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில், நேற்று மாலை இந்த குண்டு வெடிப்பு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில், அந்த நிறுவனத்தில் கிளீனராகப் பணிபுரியும் ப்ரகாஷ் மற்றும் அவரது மகள் ரூத் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரூத்தின் கணவர் தீபக்கும் அவர்களது 4 வயது மகன் ரோகினும் காயமடைந்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
English summary
At least two persons, including a woman have been killed and two others critically injured in an a blast in the premises of Christian Institute of Health Sciences & Research at Dimapur in Nagaland on Saturday.
Story first published: Sunday, June 28, 2015, 0:40 [IST]