பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்!
இம்பால்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சைகோம் திகேந்திர சிங் மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது.

மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகியோர் இது தொடர்பான தகவல் பரப்பியது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த தவறான தகவலை பதிவு செய்த அவர்கள் இருவரும் கொரோனாவுக்கு எதிராக பசு மற்றும் கோமியம் வேலை செய்து என்றும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மே 17 வரை இருவரும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர் வாங்க்கேம் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பாக இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 2 முறை கைது செய்யப்பட்டார். மணிப்பூரில் பாஜக அரசு இவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.












Click it and Unblock the Notifications