காதலை எதிர்த்த தந்தை... பெங்களூரில் அக்காவும், தங்கையும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை
பெங்களூரு: காதல் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த சகோதரிகள் இருவர், ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பாலாஜி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மல்லேசப்பா. இவருக்கு தேஜஸ்வினி (22), ரஞ்சிதா (20) என இரண்டு மகள்கள்.

பொறியியல் மாணவிகளான சகோதரிகள் இருவரும் வெவ்வேறு இளைஞர்களைக் காதலித்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக தேஜஸ்வினி வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துள்ளார்.
தங்களது காதல் விவகாரத்தை தந்தையிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மகள்களின் காதலுக்கு மல்லேசப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை நடந்த சண்டைக்குப் பின் மல்லேசப்பா உறங்கச் சென்று விட்டார். பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்த மல்லேசப்பா, மகள்கள் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்னர் சகோதரிகள் இருவரும் தங்களது பெற்றோருக்கு கடைசிக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அதில், ‘இத்தனை வருடங்கள் தங்களை அன்பாக பாதுகாப்பாக வளர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அவர்கள், இந்த தற்கொலை முடிவிற்காக பெற்றோரிடம் மன்னிப்பும் கோரி உள்ளனர்.
மேலும், தங்களது தற்கொலைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் அக்கடிதத்தில் அவர்கள் எழுதியுள்ளனர்.
ஒரே சேலையில் இரண்டு மகள்களும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு மல்லேசப்பாவும், அவரது உறவினர்களும் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications