தேர்தல் தோல்வியை ஏற்பதாக அறிவிப்பு.. முதல்வர் பதவிக்கு அகிலேஷ் யாதவ் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் பொறுப்பில் இருந்து அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்தார்.
உத்தரபிரதேச தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அகிலேஷ் யாதவ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் உத்திரபிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் கொடுத்தார் .

முன்னதாக நிருபர்களை சந்தித்த அவர், உ.பி மக்கள் எக்ஸ்பிரஸ்-வேயை தவிர்த்து புல்லட் ரயில் வேண்டும் என நினைத்திருக்கலாம். மக்கள் தீர்ப்பை நான் மனதார ஏற்கிறேன். காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததை பற்றி வருத்தப்படவில்லை. காங்கிரசுடனான கூட்டணி தொடரும்.
வாக்கு பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்யப்பட்டுள்ளதாக மாயாவதி கூறிய குற்றச்சாட்டை இனி அமையும் அரசு விசாரிக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications