உ.பி: புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு சட்டவிரோதம்- ரூ.10 லட்சம் தர உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜியில் புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின், இந்த புல்டோசர் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. தற்போது உ.பி. அரசால் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் புல்டோசர்கள் மூலம் வீடுகள், கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜால் பூயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்: பிரக்யாராஜ் மேம்பாட்டு ஆணையமானது வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.

உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றமானது, புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பதற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம், இதேபோல கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தது.

மேலும் எந்த ஒரு அவகாசமும் தராமலேயே 24 மணிநேரத்தில் புல்டோசர் மூலம் வீடுகளை இடித்து தள்ளியது கடும் கண்டனத்துக்குரியது. அத்துடன் மேல்முறையீடு செய்யவும் உரிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றும் காட்டமாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், உத்தரப்பிரதேச மாநில அரசு சட்ட நடைமுறைகளை எல்லாம் பின்பற்றாமல் செயல்படுகிறது; இதனை ஏற்க முடியாது; இத்தகைய செயல்களை ஒரு முறை பொறுத்துக் கொண்டால் இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் தொடரும் எனவும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Take a Poll
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+