மதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
டெல்லி: மதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள பூங்காவை ஸ்வாதீன் பாரத் சுபாஷ் சேனா என்ற அமைப்பை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா நடத்துவதாக பொய் கூறி ஆக்கிரமித்தனர். 260 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த பூங்காவை ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து தங்கியுள்ளனர்.

இதனிடையே நேற்று ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மாவட்ட அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் களம் இறங்கினர். போலீஸார் பூங்காவில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு கூறியபோது அவர்கள் திடீரென தாக்குதலில் இறங்கினர்.
இதனால் போலீசாருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. மோதலை கண்டுக்குள் கொண்டுவர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்பட 2 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், மதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிஜிஜு, இந்த பிரச்சினையை கையாள்வதில் பல குறைபாடுகள் இருந்துள்ளது. துரதிருஷ்டவசமான இந்த சம்பவம் பெரும் கவலைக்குரியது. அங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவை தொடர்பு கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், அங்குள்ள நிலமை குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து முழு அறிக்கை அளிக்குமாறும் உத்தரப்பிரதேச அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications