For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோகி பற்றி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தால் கைது.. சிறப்பு படையை உருவாக்கிய உ.பி முதல்வர்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உ.பி முதல்வர் யோகி பற்றி போஸ்ட் போட்டால் கைது- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 19 வயதே ஆகிறது, கல்லூரியில் படித்து வருகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    இவர் யோகி குறித்து மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரல் ஆனதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    என்ன படம்

    என்ன படம்

    யோகியின் புகைப்படத்தை போர் வீரன் போல சித்தரித்து அந்த நபர் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ராஜ்புட் இன மக்களுக்காக போராடிய போராளி போல இந்த புகைப்படத்தில் சித்தரிக்கப்பட்டு இருந்தார். யோகி மீது இருக்கும் அதீத அன்பு காரணமாக இப்படி எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்.

    நீக்கினார்

    நீக்கினார்

    இந்த நிலையில் உத்தர பிரதேச போலீஸ் பீகாரின் , ஒத்திகாரி பகுதியில் இருக்கும் அவரது வீட்டை கண்டுபிடித்தது. அவர் வெளியிட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் இருந்து நீக்கியது. தற்போது அவர் முதல்வருக்கு எதிராக களங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    மக்கள் மனதை புண்படுத்தும்

    மக்கள் மனதை புண்படுத்தும்

    இதற்கு காரணமும் சொல்லப்பட்டுள்ளது. இது ராஜ்புட் இன மக்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும் என்றுள்ளார்கள். மக்கள் மனதில் காயத்தை உண்டாக்கும் எந்த செயலுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று யோகி தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.

    சிறப்பு படை உருவாக்கம்

    சிறப்பு படை உருவாக்கம்

    ஆனால் இந்த பிரச்சனை இதோடு நிற்கவில்லை. யோகிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்பும் நபர்களை கைது செய்ய சிறப்பு படை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் தற்போது பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    UP police arrests man who posts against Yogi Adityanath, creates a special force to check social media users.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X