பணி நேரத்தில் குத்தாட்டம் போட்ட உ.பி கான்ஸ்டபிள்... பணத்தை வாரி இறைத்து சேட்டை!
லக்னோ : உத்தரபிரதேசத்தில் பணி நேரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் போதையில் மேடையேறி நடனக்கலைஞர்களுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசத்தின் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண் நடனக் கலைஞர்கள் மேடையில் நடனமாடிக் கெண்டிருந்தனர். அப்போது மேடையேறி வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காவல் சீருடையிலேயே மதுபோதையுடன் வந்து ஆபாச நடனமாடியுள்ளார்.

பெண் கலைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென மேடையேறிய கான்ஸ்டபிளை பார்த்து பயந்த நடனக் கலைஞர்கள் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க அவர்களை நடனமாடச் சொல்லி தானும் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆட்டத்தின் இறுதியில் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசி உற்சாக நடனமாடியுள்ளார் அவர், பணத்தை எடுத்துக்கொண்ட பெண் கலைஞர்களும் அவருக்கு இணையாக ஆடி அசத்தினராம்.
கான்ஸ்டபிள் போட்ட குத்தாட்டத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்கும் அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கட்டாயமாக பார்க்கக் கூடாது என்று கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications