உ.பி.யில் பயங்கரம்: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 2 பேர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 80 வயது மூதாட்டியை 2 மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது மகளை பார்க்க அகமதுகார் நகரில் இருந்து கதாரா கேரா கிராமத்திற்கு கடந்த சனிக்கிழமை மதியம் கிளம்பியுள்ளார். அவர் பேருந்திற்காக காத்திருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் அவருக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். எங்களுடன் பைக்கில் வாருங்கள், உங்களை உங்களின் மகளின் வீட்டில் விட்டுவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மூதாட்டியும் அவர்களுடன் பைக்கில் ஏறியுள்ளார். ஆனால் அந்த இருவரும் அவரை பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து மூதாட்டி என்று கூட பார்க்காமல் அவரை அந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் மூதாட்டியை ஷிகார்பூர் நகர் அருகே சாலையோரம் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். மயக்கத்தில் ரத்தப் போக்குடன் சாலையோரம் கிடந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மீரட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே மூதாட்டியின் மகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications