வரப்போகும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை.. "சனாதன தர்மம்" விவகாரத்தை ம.பி பிரசாரத்தில் எடுத்த ஸ்மிரிதி
போபால்: வரப்போகும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை என்றும் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான யுத்தம் என்றும் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசினார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், பாஜகவும் ஆட்சியை தக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தேர்தல் அனல் அங்கு தகிக்க ஆரம்பித்து விட்டது.

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் அடிக்கடி மத்திய பிரதேசத்திற்கு விசிட் அடித்து விட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மத்திய பிரதேசத்தின் ஷியோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-
வரவிருக்கும் தேர்தல் ஓட்டுக்கானது இல்லை. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான யுத்தம். ஆங்கிலேயர்கள் இங்கு வந்து விட்டு சென்றார்கள். முகலாய சாம்ராஜயம் முடிவுக்கு வந்தது. ஆனால், நாம் (சனதான தர்மம்) இங்கு இருக்கிறோம். நாளையும் தொடர்ந்து இருப்போம். இது ஒரு சாதாரண தேர்தல் யுத்தமாக இருக்க போவது இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பவர்களின் கூட்டணி உள்ளது.
நாம் வாழும் வரை நமது மதத்தை பாதுகாப்போம் என்பதே நமது உறுதிப்பாடு ஆகும்" என்றார். தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் 14 பேரின் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இல்லை என்று புறக்கணித்து இருப்பது பற்றி பேசிய ஸ்மிரிதி இரானி, காந்தி குடும்பத்தினர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ஏன் அச்சப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.
பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் எப்படி போட்டியிட போகிறார்கள். வெறும் பெயரை மாற்றுவதால் மட்டும் நரி சிங்கமாகிவிடாது" என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சை திரித்து வட இந்தியாவில் பாஜக தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியே, உதயநிதி ஸ்டாலின் பேச்சை விமர்சிக்கும் வகையில், கடுமையாக சாடி பேசினார்.
இந்த நிலையில், தான் தற்போது மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும் பாஜக , சனாதன விவகாரத்தை இந்தியா கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியே ஸ்மிரிதி இரானியும் தனது பேச்சில் சனாதனம் குறித்து இழிவாக பேசிவிட்டதாக கடுமையாக சாடி பேசினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications