உ.பி.,யில் ரயில் தடம்புரண்டு விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. ரேபரேலி அருகே ஹர்சந்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ரயில் வேகம் எடுத்த சில நிமிடத்தில் தடம்புரண்டுள்ளது. 6 க்கும் மேற்பட்ட பெட்டிகள் இதனால் கவிழ்ந்துள்ளது.
சுமார் ஐந்து மீட்டர் இந்த பெட்டிகள் இப்படியே தரையில் உரசியபடி சென்றுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அதன்பின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரயிலுக்கு அடியில் எத்தனை பேர் சிக்கி இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications