பாஜ சட்டமன்ற தலைவராக வசுந்தரா தேர்வு: ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க முடிவு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதாக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக வசுந்தரா ராஜே தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
மொத்தம் 199 தொகுதிகளை கொண்டது ராஜஸ்தான் சட்டசபை. நடந்து முடிந்த அதன் சட்டசபைத் தேர்தலில், பாஜக 162 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

மீதமுள்ள 21 தொகுதிகளில் காங்கிரஸூம், 3 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், மற்றவை 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்று ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில், வசுந்தரா ராஜே அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, வசுந்தர ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.












Click it and Unblock the Notifications