சிக்கிமில் இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பு- அட்டகாசம் வைரலாகும் வீடியோ
சிக்கிமில் அத்துமீறி எல்லைக்கட்டுப்பாட்டை தாண்டி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காங்டாங்: சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா- பூடானின் எல்லையில் டோக்லாம் பீடபூமியை சீனா தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அப்பகுதியில் சாலை அமைக்கவும் சீனா முயற்சித்ததை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.

போர் பதற்றம்
இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அப்படி நுழைந்த சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தடுக்க இருதரப்புக்கும் கைகலப்பானது. இதனால் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தில் இருக்கிறது.

எல்லையில் ராணுவம் குவிப்பு
சீனா உக்கிரமாக ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக நமது ராணுவமும் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு போரைப் போல கடுமையாக பதிலடி தருவோம் என்றெல்லாம் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.

கோழி கழுத்துக்கு குறி
ஆனால் 1962-ம் ஆண்டு இந்தியா என்பதே வேறு; இப்போதைய இந்தியாவின் வலிமை என்பது வேறு என்பதை சீனா புரிந்து கொள்ளவில்லை. டோக்லாம் பீடபூமியை நெருங்கிவிட்டால் இந்தியாவையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கக் கூடிய கோழிகழுத்துப் பகுதியான சிலிகுரி பிராந்தியத்துக்கு பேராபத்து என்பதால் ராணுவம் உச்சகட்ட உஷார் நிலையில் இருந்து வருகிறது.
வைரலாகும் வீடியோ
இதனிடையே சிக்கிம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களுடன் சீனா ராணுவத்தினர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் வட இந்திய சேனல்கள் இந்த காட்சிகளை ஒளிபரப்பி இருந்தன. இப்போது எடிட் செய்யப்பட்டாத முழுமையான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகின்றன.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications