மல்லையா விமானத்தை ஏலம் விட்டு பிரிச்சு மேஞ்சுட்டாங்களாமே...!
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் பாக்கியை வசூலிக்க அதன் நிறுவனர் விஜய் மல்லையாவின் தனி விமானம் ஏலம் விடப்பட்டது. தற்போது அதன் பாகங்கள் பிரிக்கப்பட்டு 'காயலான்' கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
மதுபான தயாரிப்பு தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் எனும் விமான சேவையை தொடங்கினார். அத்துடன் 11 இருக்கைகள் கொண்ட தனி விமானத்தையும் அவர் பயன்படுத்தி வந்தார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நிதி நெருக்கடிக்குள்ளானது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2012ஆம் ஆண்டு இதன் விமான சேவை நிறுத்தப்பட்டு உரிமமும் ரத்தானது.
சுமார் ரூ7 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு விஜய் மல்லையாவுக்கு கடன் இருக்கிறது. இதனால் கடன் கொடுத்த வங்கிகள் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைத்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக விஜய் மல்லையா பயன்படுத்தி வந்த தனி விமானம் அண்மையில் ஏலம் விடப்பட்டது. மும்பை சர்வதேச விமான நிலையம் நடத்திய இந்த ஏலத்தில் குர்லாவை சேர்ந்த சைலன்ட் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ரூ. 22 லட்சம் ரூபாய்க்கு விமானத்தை வாங்கியது.
பராமரிப்பின்றி பழுதடைந்த அந்த விமானத்தின் பாகங்கள் உடைக்கப்பட்டு தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது. மேலும் மும்பையின் வில்லே பார்லேயில் உள்ள ரூ100 கோடி மதிப்புள்ள கிங் பிஷர் மாளிகையும் விஜய் மல்லையாவின் கைவிட்டு போக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications