மல்லையா விமானத்தை ஏலம் விட்டு பிரிச்சு மேஞ்சுட்டாங்களாமே...!
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் பாக்கியை வசூலிக்க அதன் நிறுவனர் விஜய் மல்லையாவின் தனி விமானம் ஏலம் விடப்பட்டது. தற்போது அதன் பாகங்கள் பிரிக்கப்பட்டு 'காயலான்' கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
மதுபான தயாரிப்பு தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் எனும் விமான சேவையை தொடங்கினார். அத்துடன் 11 இருக்கைகள் கொண்ட தனி விமானத்தையும் அவர் பயன்படுத்தி வந்தார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நிதி நெருக்கடிக்குள்ளானது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2012ஆம் ஆண்டு இதன் விமான சேவை நிறுத்தப்பட்டு உரிமமும் ரத்தானது.
சுமார் ரூ7 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு விஜய் மல்லையாவுக்கு கடன் இருக்கிறது. இதனால் கடன் கொடுத்த வங்கிகள் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைத்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக விஜய் மல்லையா பயன்படுத்தி வந்த தனி விமானம் அண்மையில் ஏலம் விடப்பட்டது. மும்பை சர்வதேச விமான நிலையம் நடத்திய இந்த ஏலத்தில் குர்லாவை சேர்ந்த சைலன்ட் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ரூ. 22 லட்சம் ரூபாய்க்கு விமானத்தை வாங்கியது.
பராமரிப்பின்றி பழுதடைந்த அந்த விமானத்தின் பாகங்கள் உடைக்கப்பட்டு தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது. மேலும் மும்பையின் வில்லே பார்லேயில் உள்ள ரூ100 கோடி மதிப்புள்ள கிங் பிஷர் மாளிகையும் விஜய் மல்லையாவின் கைவிட்டு போக இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications