ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதியில் போர்மேகம் …. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
Recommended Video
ஜம்முகாஷ்மீர்:ஜம்முகாஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து... இரு நாடுகளின் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எல்லை பகுதிகளில் உள்ள கிராம மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையின் F -16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை நேற்று குண்டுவீசி தகர்த்தது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது.
குண்டு வீசி தாக்குதல்
அதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தா போர் விமானங்கள் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
போர் விமானம் துரத்தியடிப்பு
அதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் ரஜோரி ராணுவ நிலை அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆலோசனை
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் குண்டுவீசி தாக்கிய நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ரா அமைப்பின் தலைவர் உள்ளிட்டோருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
விமான நிலையங்கள் மூடல்
ஜம்மு, பதான்கோட், லே, அமிர்தசரஸ் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலால் போர் பதற்றம் உருவாகி இருக்கிறது.