போன் பேச்சை டேப் செய்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்.. அமைச்சர் வி.கே.சிங் மனைவி பரபர புகார்
டெல்லி: மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே சிங்கின் மனைவி பார்தி சிங் டெல்லி துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்து உள்ளார். அதில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் எங்கள் போன் உரையாடல்களை திருடி வைத்து கொண்டு அதன் மூலம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டி வருகிறார். என்று கூறி உள்ளார்.
பாரதி சிங் ஆகஸ்ட் 6 ம் தேதி தனது உறவினருடன் போனில் பேசி உள்ளார். இந்த தொலைபேசி உரையாடலை அவருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார். பின்னர் பாரதி சிங்கிடம், தனக்கு ரூ.2 கோடி கொடுக்காவிட்டால் அந்த தொலைப்பேசி உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

இது தொடர்பாக பாரதி சிங், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மிரட்டல் விடுப்பவர் தனக்கு தெரிந்தவர் தான் எனவும், அவரது பெயர் பிரதீப் கவுகான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் என்ன உரையாடலை பதிவு செய்து வைத்து உள்ளார் என தெரியவில்லை.ஆனால் சவுகான் இதனை வெளியிட்டால் கணவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என மிரட்டுவதாக அந்த புகாரில் கூறி பார்தி சிங் உள்ளார்.












Click it and Unblock the Notifications