லக்கிம்பூர் வன்முறை: பிரேத பரிசோதனை செய்யாமல் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம்- உறவினர்கள் திட்டவட்டம்
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட 3 விவசாயிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று அவர்களின் உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் வாகனம் வேண்டும் என்றே விவசாயிகள் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து வெடித்த வன்முறையில் மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.

அணி திரண்ட எதிர்க்கட்சிகள்
இந்த வன்முறை சம்பவம் விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கி உள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் இந்த வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் முதல்வரும் தடுக்கப்பட்டார்
இதனிடையே லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஏற்கனவே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலையும் அனுமதிக்காமல் உபி அரசு தடை விதித்தது.

பிரேத பரிசோதனை
மேலும் இறந்த விவசாயிகளின் உடல்களை பிரதேச பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப் போவதும் இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். விவசாயிகளுக்காக போராடியதால அநீதியாக தங்களது உறவுகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் திட்டவட்ட மறுப்பு
ஆனால் மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவோ, என் மகன்தான் வன்முறைக்கு காரணம் என ஆதாரத்தைக் காட்டுங்கள்.. நானே அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்கிறார். ஏற்கனவே அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா மகன் மீது உ.பி.யில் ஆளும் பாஜக அரசுதான் கொலை வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்ததாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications