உச்சகட்ட பரபரப்பு.. சற்றுநேரத்தில் முதல்வரை தேர்வு செய்வோம்.. கோவாவில் பாஜக அறிவிப்பு!
கோவாவில் இன்னும் 30 நிமிடத்தில் புதிய முதல்வரை அறிவிப்போம் என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளது.
Recommended Video

பனாஜி: கோவாவில் இன்னும் 30 நிமிடத்தில் புதிய முதல்வரை அறிவிப்போம் என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
இந்த நிலையில் புதிய கோவா முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. யார் முதல்வராக வருவார் என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

கோவா நிலை என்ன
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளது. அதில் மனோகர் பாரிக்கரின் மறைவை அடுத்து மொத்தமாக 4 இடங்கள் காலியாக உள்ளது. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களை கொண்டுள்ளது. கோவா மாநில கட்சிகளான மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வேர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேட்சைகள் மூன்று இடங்களை கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி ஆட்சி
இதற்கு முன் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் ஆகியவற்றின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நடத்தி வந்தது. ஆனால் இவர்களும் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்க மட்டுமே ஆதரவு தருவோம் என்று நிபந்தனையுடன் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். இந்த நிலையில்தான் மனோகர் பாரிக்கர் இயற்கை எய்தியுள்ளார்.

நடக்குமா
தற்போது அங்கு இருக்கும் 36 இடங்களில் (4 காலி இடங்கள் போக) பெரும்பான்மை பெற 19 இடங்கள் தேவை. தற்போது பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. பாஜக பெரும்பான்மை பெற இன்னும் 7 இடங்கள் தேவை. இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவு அளித்தது போல மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் பாஜகவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
|
காங்கிரஸ் கடிதம்
இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கோவா காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் அளித்து இருக்கிறார்கள். அதே சமயம் பாஜகவும் அங்கு ஆட்சியை தொடர போகிறோம் என்று கூறி வருவதால் பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
|
என்ன திருப்பம்
தற்போது புதிய திருப்பமாக பாஜக அங்கு 2 மணிக்கு பின் புதிய முதல்வரை அறிவிப்போம் என்று கூறியுள்ளது. 3 மணிக்குள் புதிய முதல்வர் பதவி ஏற்பார் என்றும் பாஜக கூறியுள்ளது. பாஜக எந்த நம்பிக்கையில் இப்படி கூறியது, காங்கிரஸ் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications