பெங்களூர் சிறையில் இளவரசிக்கு செம "வேலை" கொடுத்த சசிகலா
நான்கு வருட சாதாரண சிறை தண்டனை என்பதால் சிறையில் வேலை பார்ப்பது கட்டாயம் கிடையாது. ஆனால், இளவரசிக்கு கடிதம் வாசிப்பது ஒரு புது வேலையாக போய்விட்டது என்கிறார்கள் சிறைத் துறை வட்டாரங்களில்.
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி தனது பொழுது போக்கிற்காக என்ன செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா மரணடைந்து விட்டதால் அவரை தவிர்த்த மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இளவரசியும், சசிகலாவும் ஒரே சிறையிலும், சுதாகரன் ஆண்களுக்கான சிறைப் பிரிவிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளவரசிக்கு பொழுது போக்க கிடைத்துள்ள ஆயுதம்தான் கடிதங்கள்.

கடிதங்கள்
பெங்களூர் சிறைச்சாலைக்கு சசிகலா பெயரிட்டு நிறைய கடிதங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இவற்றை முன்பு சசிகலாவே படித்தார். ஆனால் அதில் 10க்கு ஆறு கடிதங்கள் சசிகலாவை வசை பாடி வரும் கடிதங்கள். எனவே இப்போதெல்லாம் சசிகலா அக்கடிதங்களை படிப்பதை நிறுத்திவிட்டாராம்.

வாசிக்கும் வேலை
இப்போது அந்த வேலையை இளவரசி பார்க்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சசிகலாவுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களை இளவரசி படித்து பார்த்து, திட்டல், வசை இல்லாத கடிதங்களை மட்டுமே சசிகலா கைகளுக்கு கொண்டு சேர்க்கிறார். இப்போது இளவரசிக்கு இதுதான் டைம் பாஸ்.

சசிகலா வேதனை
பல்வேறு கடிதங்கள், ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்துவிட்டதாகவே குற்றம்சாட்டி வருவதுதான் சசிகலாவின் அதிர்ச்சிக்கு காரணம். இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து பராமரித்துக் கொண்டதற்கு கிடைத்த பரிசா இது என்று அவர் இளவரசியிடம் புழங்கினாராம். இதனால்தான் இளவரசியே கடிதங்களை படிக்க தொடங்கியுள்ளார்.

புது வேலை
நான்கு வருட சாதாரண சிறை தண்டனை என்பதால் சிறையில் வேலை பார்ப்பது கட்டாயம் கிடையாது. ஆனால், இளவரசிக்கு கடிதம் வாசிப்பது ஒரு புது வேலையாக போய்விட்டது என்கிறார்கள் சிறைத் துறை வட்டாரங்களில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications