பிஎம்டபிள்யூ கார், 150 சவரன் நகை தரல! திருமணத்தை மறுத்த காதலன்! கேரள டாக்டர் தற்கொலை! பகீர் பின்னணி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மருத்துவம் படித்து வந்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று இருக்கும் போதிலும், வரதட்சணை கேட்பதும் அது சார்ந்த மரணங்களும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

அப்படியொரு மோசமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது கேரளாவின் திருவனந்தபுரத்தில் 26 வயதான மருத்துவர் ஒருவர் தற்கொலையால் உயிரிழந்தார்.
கேரளா பெண்: அந்த பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கேட்ட வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று காதலன் திருமணத்தை நிறுத்திய நிலையில், அந்த பெண் தற்கொலையால் உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வரதட்சணை கேட்டு தொல்லை செய்த அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைதும் செய்துள்ளனர்.
வரதட்சணை: டாக்டர் ஷஹானா தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார். அவரது தந்தை வளைகுடாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஷஹானா டாக்டர் ஈஏ ருவைஸ் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இருப்பினும், திருமணத்திற்கு டாக்டர் ருவைஸின் குடும்பத்தினர் வரதட்சணையாக 150 தங்கச் சவரன், 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் கேட்டதாக டாக்டர் ஷஹானாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.. இருப்பினும், இவ்வளவு தர முடியாது என்று டாக்டர் ஷஹானாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த ரூவைஸின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
பணம் தான் தேவை: இதனால் மனமுடைந்த அந்த இளம் மருத்துவர், தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது அபார்ட்மெண்டில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வரதட்சணை குறித்த புகார்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
மாநில சிறுபான்மை ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் பி.சதிதேவி, டாக்டர் ஷஹானாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்தார். வரதட்சணைக் காரணமாகக் காதலித்து வந்த இளைஞரே பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததும் இதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications