4 குற்றவாளிகளும் விசாரணையின்போது சொன்னது என்ன...?
நான்கு பேருமே தாங்கள் அப்பாவிகள் என்றும் தவறு செய்யவில்லை என்றும் கூறியிருந்தனர்.
நான்கு பேரும் சொன்னைவை இவைதான்...
முகேஷ் சிங்
நான் அப்பாவி. எனது சகோதரர் ராம்சிங், என்னை பஸ்ஸை ஓட்டச் சொன்னார். மறறவர்கள் குடித்திருந்ததால் என்னை ஓட்டுமாறு கூறஇனார். நான் டிரைவர் சீட்டை விட்டு எழுந்திருக்கவே இல்லை. மேலும் பஸ்சின் கேபின் கதவும் மூடப்பட்டிருந்தது. எனவே என்னால் எந்த சத்தத்தையும் தெளிவாக கேட்க முடியவில்லை. நான் தவறு செய்யவில்லை.
வினய் சர்மா
நானும் பவன் குப்தாவும், தெற்கு டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். நாங்கள் பஸ்சிலேயே இல்லை. ராம்சிங்குடன் எங்களுக்கு விரோதம் இருந்தது. எனவே எங்களை முகேஷ்தான் வேண்டும் என்றே மாட்டி விட்டுள்ளான் என்றான். பவன் குப்தாவும் இதேபோல கூறினான்.
அக்ஷய் தாக்குர்
நான் பஸ்சில் இல்லை. நான் டெல்லியிலேயே அப்போது இல்லை. எனது சொந்த கிராமத்திற்கு டிசம்பர் 15ம் தேதியே போய் விட்டேன் என்றான் தாக்குர்.