காவிரி வழக்கில் வாதாடமாட்டேன் என்று கூறிய கர்நாடக வழக்கறிஞர் நாரிமன்.. பாராட்டிய உச்சநீதிமன்றம்
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்குமாறு கர்நாடக அரசுக்கு எச்சரிக்கைவிடுத்து, காவிரி வழக்கில் இருந்தே வெளியேறுவேன் என மிரட்டல் விடுத்தவர் அம்மாநிலத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன்.
தமிழகம்-கர்நாடகா நடுவேயான காவிரி பங்கீடு வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தின் பங்கான 192 டிஎம்சி என்பது 177.25 டிஎம்சி தண்ணீராக குறைக்கப்பட்டது. இதனால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்கள் தீர்ப்பின்போது பாலி.நாரிமனின் சுப்ரீம் கோர்ட் மீதான மதிப்பை குறிப்பிட்டு புகழ்ந்துள்ளது.
2016ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தமிழகத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி நீரை திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தண்ணீர் விட முடியாது என அறிவித்தார்.
இதையடுத்து, செப்டம்பர் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நாரிமன் 2 கடிதங்களை சமர்ப்பித்தார். அதில், தனக்கும் கர்நாடக மாநில அரசுக்கும் நடந்த உரையாடல்களை குறிப்பிட்டார். சித்தராமையாவின் முடிவுக்கு நாரிமன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்காவிட்டால் வழக்கில் வாதிடுவதில்லை என அரசிடம் தெரிவித்துவிட்டதாகவும் நாரிமன் அப்போது தெரிவித்தார்.
இதைத்தான் இப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பாராட்டியுள்ளனர். நாரிமன் நீதிமன்றத்தின் மீதான மாண்பை பாதுகாக்கும் வகையில், நாரிமன் செயல்பட்டார் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எது எப்படியோ, வழக்கில் இருந்து விடுபடப்போவதாக மிரட்டிய நாரிமன் தலைமையிலான வழக்கறிஞர் குழு கடைசியில் கர்நாடகாவிற்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்துவிட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications