Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஐ ரெய்டு: மோடியை கோழை, சைக்கோ என சகட்டு மேனிக்கு கரித்து கொட்டிய கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தன் அலுவலகத்தில் நடந்த சிபிஐ ரெய்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட கோழைத்தன நடவடிக்கை என்று கோபம் வெளிப்படுத்தியுள்ளார். சைக்கோ என்றும் பிரதமர் குறித்து கெஜ்ரிவால் சாடியுள்ளார்.

கெஜ்ரிவால் ஆபீசில் சிபிஐ ரெய்டு நடத்திய தகவல் வெளியான சில நிமிடங்களில், தனது டிவிட் ஒன்றில், சிபிஐ ரெய்டு நடந்திருப்பதை அவர் உறுதி செய்திருந்தார்.

When Modi cudn't handle me politically, he resorts to this cowardice : Arvind Kejriwal

மற்றொரு டிவிட்டில், மோடியை கடுமையாக சாடியிருந்தார் கெஜ்ரிவால். அவர் கூறுகையில், "அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், இந்த கோழைத்தன நடவடிக்கையை மோடி தூண்டிவிட்டுள்ளார்" இவ்வாறு கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

அதையடுத்து கெஜ்ரிவால் மேலும் சில டிவிட்டுகளை வெளியிட்டார். அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:
மோடி ஒரு கோழை, ஒரு சைக்கோ. சிபிஐ எனது அலுவலகத்தை சோதிட்டு, கோப்புகளை பார்வையிட்டது, ஆனால் இல்லை என பொய் சொல்கிறது. மோடி எந்த கோப்பு வேண்டும் என்று கேட்கட்டுமே?

ஊழல் குற்றச்சாட்டியில் சிக்கிய எனது அமைச்சரையும், மூத்த அதிகாரியையும் டிஸ்மிஸ் செய்ததோடு, சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்த ஒரே முதல்வர் நான்தான்.

ராஜேந்தருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால், அதை சிபிஐ என்னிடம் கொடுத்திருக்கலாம். நான் நடவடிக்கை எடுத்திருப்பேன். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+