தமிழக அனைத்து கட்சியினரை சந்திப்பதைத் தடுக்கவே மத்திய அரசின் திடீர் ஆலோசனை கூட்டம்?
தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சந்திக்க மறுக்கும் டெல்லி திடீரென காவிரி விவகாரத்தில் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது.
Recommended Video

சென்னை/டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை திடீரென மத்திய அரசு கூட்டியுள்ளது. தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு வரும் நிலையில் இதைத் தவிர்க்கும் வகையில்தான் இந்த ஆலோசனைக் கூட்டத்தை டெல்லி கூட்டியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னர் உத்தரவிட்ட போது மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதம் காட்டியது மத்திய அரசு. தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்குகிறது.
இந்நிலையில் 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைத்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

சந்திக்க தமிழக குழு முயற்சி
அத்துடன் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக் கட்சி குழு முயற்சித்தது. டெல்லியிலும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் டெல்லி கைவிரித்துவிட்டது என்றுதான் கூறப்படுகிறது.

கர்நாடகாவை மனதில் வைத்து..
இந்நிலையில் திடீரென 4 மாநில ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. கர்நாடகாவில் தங்களுக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்பதால் காவிரி பிரச்சனையில் டெல்லி தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது.

தவிர்க்கவே ஆலோசனை
தற்போது தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினரை பிரதமர் மோடி சந்தித்துவிட்டால் கர்நாடகாவிலும் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என கருதியே தவிர்த்து வருகிறது டெல்லி. இப்போது திடீரென 4 மாநில ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதும் இதைத் தவிர்க்கும் வகையில்தான் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழக அரசு என்ன சொல்லும்?
அதுதான் மத்திய அரசு அழைத்திருக்கிறதே.. அப்போது போய் நாங்கள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவோம் என்கிற பல்லவியைத்தான் தமிழக அரசு தரப்பு பாடப் போகிறது. டெல்லியில் என்ன முடிவெடுத்தாலும் அது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பது தெரிந்த ஒன்று. ஆகையால் 4 மாநில ஆலோசனைக் கூட்டம் நிச்சயம் கண்துடைப்பாக அல்லது இன்னொரு பச்சை துரோகமாகத்தான் இருக்கப் போகிறது என்பதே தமிழர் அச்சம்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications