'அம்மா' சிறையில் யாரையும் சந்திக்க மறுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
பெங்களூர்: பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா யாரையும் சந்திக்க மறுப்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 27ம் தேதி ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்த மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதாவின் ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன் பெங்களூருக்கு சென்றார்.
ஆனால் அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார். மேலும் அன்றைய தினம் பெங்களூரில் இருந்த ஓ. பன்னீர் செல்வத்தையும் ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அன்று மதியம் சென்னை சென்ற பன்னீர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 29ம் தேதி பதவியேற்ற கையோடு பன்னீர் பெங்களூர் வந்தார்.

பன்னீர் செல்வம்
29ம் தேதி இரவு ஹோட்டலில் தங்கிய முதல்வர் பன்னீர் செல்வம் மறுநாள் அதாவது 30ம் தேதி ஜெயலலிதாவை சந்திக்க சிறைக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் போனதால் அன்று மாலையே அவர் சென்னைக்கு சென்றுவிட்டார்.

காரணம்
இப்படி ஜெயலலிதா யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறுவதற்கு காரணங்கள் உள்ளதாம்.

தூரம்
சிறையில் ஜெயலலிதா தங்கியிருப்பது தரை தளத்தில். அவர் பார்வையாளர்கள் அறைக்கு வர வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமாம்.

முழங்கால் வலி
முழங்கால் வலியால் அவதிப்படும் ஜெயலலிதாவால் ஒரு கிலோ மீட்டர் நடந்து வர இயலாது என்பதால் அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறாராம்.

தோற்றம்..
முதல்வராக இருக்கையில் ஜெயலலிதா வெகு சிம்பிளாக உடையணிந்தாலும் கம்பீரமாக காட்சியளிப்பார். ஆனால் சிறையில் இருக்கும் அவர் இந்த தோற்றத்தில் தன்னை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை என்று கருதுவதாகத் தெரிகிறது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications