'அம்மா' சிறையில் யாரையும் சந்திக்க மறுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
பெங்களூர்: பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா யாரையும் சந்திக்க மறுப்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 27ம் தேதி ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் அடைத்த மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதாவின் ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன் பெங்களூருக்கு சென்றார்.
ஆனால் அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார். மேலும் அன்றைய தினம் பெங்களூரில் இருந்த ஓ. பன்னீர் செல்வத்தையும் ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அன்று மதியம் சென்னை சென்ற பன்னீர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 29ம் தேதி பதவியேற்ற கையோடு பன்னீர் பெங்களூர் வந்தார்.

பன்னீர் செல்வம்
29ம் தேதி இரவு ஹோட்டலில் தங்கிய முதல்வர் பன்னீர் செல்வம் மறுநாள் அதாவது 30ம் தேதி ஜெயலலிதாவை சந்திக்க சிறைக்கு சென்றார். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் போனதால் அன்று மாலையே அவர் சென்னைக்கு சென்றுவிட்டார்.

காரணம்
இப்படி ஜெயலலிதா யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறுவதற்கு காரணங்கள் உள்ளதாம்.

தூரம்
சிறையில் ஜெயலலிதா தங்கியிருப்பது தரை தளத்தில். அவர் பார்வையாளர்கள் அறைக்கு வர வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமாம்.

முழங்கால் வலி
முழங்கால் வலியால் அவதிப்படும் ஜெயலலிதாவால் ஒரு கிலோ மீட்டர் நடந்து வர இயலாது என்பதால் அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறாராம்.

தோற்றம்..
முதல்வராக இருக்கையில் ஜெயலலிதா வெகு சிம்பிளாக உடையணிந்தாலும் கம்பீரமாக காட்சியளிப்பார். ஆனால் சிறையில் இருக்கும் அவர் இந்த தோற்றத்தில் தன்னை யாரும் பார்ப்பதை விரும்பவில்லை என்று கருதுவதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications