கொரோனா: தெற்காசியர்களிடம் அதிகம் காணப்படும் கொரோனா பாதிக்கும் ஜீன் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?
நுரையீரல் செயலிழப்பது மற்றும் கொரோனாவால் மரணம் ஏற்படும் அபாயங்களை இரண்டு மடங்காக அதிகரிக்கும் ஒரு மரபணுவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்காசிய பின்புலம் கொண்டவர்களில் 60 சதவீதத்தினர், ஐரோப்பிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்த அபாயத்தை அதிகரிக்கக் கூடிய மரபணு உள்ளது.
இந்த அபாயத்தை கணிசமாக குறைக்க கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
கொரோனாவால் பிரிட்டனில் உள்ள சில சமூகங்கள் மற்றும் தெற்கு ஆசியா ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று 'நேச்சர் ஜெனடிக்ஸ்' ஆய்வு புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஆனால் முழுமையான விளக்கங்களைக் கொடுக்கவில்லை.
அபாயங்களை அதிகரிக்கும் சரியான மரபணுவைக் கண்டுபிடிக்க, முந்தைய மரபணு ஆராய்ச்சிப் பணிகளோடு, ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். அந்த மரபணுவின் பெயர் LZTFL1. இது தான் கொரோனா தொடர்பான அபாயங்கள் அதிகரிக்க காரணம்.
- கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்
- தொங்கா தீவு நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று
இந்த மரபணு ஆப்பிரிக்க கரீபியப் பின்புலம் உள்ளவர்களில் இரண்டு சதவீதம் பேருக்கு இருப்பதாகவும், கிழக்கு ஆசிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 1.8 சதவீதம் பேருக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த அபாயகரமான மரபணு எல்லா மக்களையும் ஒரே போல பாதிப்பதில்லை என கண்டுபிடித்துள்ளதாக இந்த ஆய்வின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் டேவிஸ் கூறியுள்ளார்.
குறிப்பாக வயது உட்பட பல சிக்கலான காரணிகள், ஒவ்வொரு நபரின் அபாய அளவுக்கு காரணமாக அமைகின்றன என்று அவர் கூறினார்.
"ஏன் சில சமூகங்கள் மட்டும் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது என்பதை விளக்க, சமூக பொருளாதார காரணிகள் கூட முக்கியமாக இருக்கலாம்" என்று கூறினார்.
"நம்மால் மரபணுக்களை மாற்ற முடியாது, கொரோனாவால் பாதிப்பை அதிகப்படுத்தும் அபாயமுள்ள மரபணுவைக் கொண்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியால் அதிக பலன் கிடைக்கலாம் என எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன." என்கிறார்.
பாதுகாப்பு அவசியம்
இந்த அதிக அபாயமுள்ள மரபணுவைக் கொண்ட மக்களின் நுரையீரல், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மரபணு, நுரையீரலை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் செல் வரிசையை செயல்படவிடாமல் தடுக்கிறது.
நுரையீரலை பாதுகாக்கும் செல் வரிசை, கொரோனா வைரஸை நேரடியாக எதிர்கொள்கிறது. அச்செல்கள் கொரோனா வைரஸை குறைந்த பிரத்யேகத் தன்மை கொண்டவைகளாக மாற்றி, வைரஸை எதிர்கொள்கிறது.
வைரஸை குறைந்த பிரத்யேக தன்மை கொண்டதாக மாற்றும் செயல்பாடு, ACE-2 என்கிற முக்கிய புரத பரப்பின் மீது படியும் செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இந்த ACE-2 தான் கொரோனா வைரஸ் செல்களோடு இணைய முக்கிய காரணியாக இருக்கின்றன.
LZTFL1 என்கிற மரபணு கொண்டவர்களுக்கு இந்த செயல்பாடே நடப்பதில்லை என்பதால், நுரையீரல் செல்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித தாக்கத்தையும் இது ஏற்படுத்துவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் கூட, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு பாதுகாப்பைப் பெறலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த கண்டுபிடிப்பு, பிரத்யேகமாக நுரையீரலை இலக்கு வைத்து பாதுகாக்கும் மருந்துகளைத் தயாரிக்க வழிவகுக்கும். தற்போதுள்ள மருந்துகள் பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இலக்கு வைத்தே தயாரிக்கப்படுகின்றன.
பிற செய்திகள்:
- காடுகள் அழிப்பை 2030க்குள் நிறுத்த சொல்வது நியாயமற்றது என்கிறார் இந்தோனீசிய அமைச்சர்
- மீண்டும் கொரோனா வைரசின் மையமாகும் ஐரோப்பா: எச்சரிக்கும் WHO, நான்காவது அலையா இது?
- மலையை மீட்பதற்கு கரம் கோர்த்துப் போராடும் பாமக, விசிக
- நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்
- வாயில் ரத்தம் வடிய விழுந்து இறந்த 10 நெருப்புக் கோழிகள்: என்ன நடக்கிறது வண்டலூரில்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!














Click it and Unblock the Notifications