என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ்
திஸ்பூர்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்றுக் கொண்டு, மாநிலத்திலுல்ள அனைத்து மக்களுக்கு அடையாள அட்டையை வழங்குவோம் என்று அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரசாரம் மேற்கொண்ட அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, காங்கிரஸ் ஆட்சி என்ஆர்சி-ஐ ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், பாஜக தற்போது என்ஆர்சியை நிறுத்தி வைத்துள்ளது. அதை உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் மாநிலத்தில் அமல்படுத்துவோம். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டையை வழங்குவோம் என்று அவர் பேசினார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதி பட்டியலில் விட்டுப்போன 19.06 லட்சம் பேரின் முறையீடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிபுன் போரா தெரிவித்தார்,
அசாம் மாநிலத்தில் சுமார் 3.3 கோடி பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications