என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ்
திஸ்பூர்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்றுக் கொண்டு, மாநிலத்திலுல்ள அனைத்து மக்களுக்கு அடையாள அட்டையை வழங்குவோம் என்று அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரசாரம் மேற்கொண்ட அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, காங்கிரஸ் ஆட்சி என்ஆர்சி-ஐ ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், பாஜக தற்போது என்ஆர்சியை நிறுத்தி வைத்துள்ளது. அதை உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் மாநிலத்தில் அமல்படுத்துவோம். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டையை வழங்குவோம் என்று அவர் பேசினார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதி பட்டியலில் விட்டுப்போன 19.06 லட்சம் பேரின் முறையீடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிபுன் போரா தெரிவித்தார்,
அசாம் மாநிலத்தில் சுமார் 3.3 கோடி பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications