ஜார்க்கண்ட்டில் 2 கிங் மேக்கர்கள்.. இருவருக்கும் வலை வீசும் பாஜக.. ஆட்சியை தக்க வைக்குமா?
Recommended Video
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு அதிக இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், 2 கிங் மேக்கர்கள் அந்த மாநிலத்தில் உருவாகியுள்ளனர். இருவருக்கும் பாஜக தற்போது வலை வீசியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக வெளியான எக்சிட் போல் கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே இருந்து வந்தது.
ஆனால் தற்போது திடீரென பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது சூழ்நிலை. தற்போதைய நிலவரப்படி பாஜக (இத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது) 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ஜேவிஎம்
அதேபோல பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி (பிரஜாதந்திரிக்) கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் நீண்ட கால கூட்டணிக் கட்சியாக இருந்து இந்த தேர்தலில் பாஜகவால் கழற்றி விடப்பட்ட அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவர்களுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இரண்டு கிங் மேக்கர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் ஏஜேஎஸ்யூ கட்சியும், ஜேவிஎம் கட்சியும் கிங் மேக்கர்களாக உருவெடுத்திருக்கின்றனர். ஏஜேஎஸ்யூ கட்சியை பாஜக உதறியதால்தான் இப்போது அது திணறியுள்ளது. அதேசமயம், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வேலைகளில் இப்போதே இறங்கி விட்டது.

மராண்டி ரெடிதான்
இதற்காக பாபுலால் மராண்டி மற்றும் ஏஜேஎஸ்யூ தலைவர் சுரேஷ் மஹதோ ஆகியோரை அது தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாஜகவுடன் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க தாங்கள் தயார் என்று பாபுலால் மராண்டி கூறியுள்ளார். எனவே அக்கட்சியுடன் இணைந்து பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முயற்சிக்கலாம். மராண்டியும் சில பல பேரங்களுக்குப் பின்னர் ஆதரவு தர முன் வருவார் என்றே தெரிகிறது.

இழுக்கும் முயற்சிகள்
அதேபோல கழற்றி விட்ட மாணவர் யூனியன் கட்சியையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் பாஜக தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே இந்த இரு கட்சிகளையும் தன்பக்கம் இழுத்து விட்டால் பாஜகவுக்கு எளிதாக பெரும்பான்மை பலம் கிடைத்து விடும். எனவே இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.

சித்து விளையாட்டுகள்
அதேசமயம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் டஃப் பைட் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியும் இரு கட்சிகளையும் இழுக்க முயற்சிக்கும். அவர்களுக்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. எனவே ஜேவிஎம் மற்றும் ஏஜேஎஸ்யூ ஆகியோருக்கான கிராக்கி தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ஏஜேஎஸ்யூவுக்கான கிராக்கிதான் மிக மிக அதிகமாக உள்ளது. காரணம் ஜேவிஎம்மை விட இக்கட்சிக்குத்தான் கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால்.
-
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications