ஜார்க்கண்ட்டில் 2 கிங் மேக்கர்கள்.. இருவருக்கும் வலை வீசும் பாஜக.. ஆட்சியை தக்க வைக்குமா?
Recommended Video
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் திடீர் திருப்பமாக தற்போது பாஜகவுக்கு அதிக இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், 2 கிங் மேக்கர்கள் அந்த மாநிலத்தில் உருவாகியுள்ளனர். இருவருக்கும் பாஜக தற்போது வலை வீசியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முன்னதாக வெளியான எக்சிட் போல் கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே இருந்து வந்தது.
ஆனால் தற்போது திடீரென பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது சூழ்நிலை. தற்போதைய நிலவரப்படி பாஜக (இத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது) 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ஜேவிஎம்
அதேபோல பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி (பிரஜாதந்திரிக்) கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் நீண்ட கால கூட்டணிக் கட்சியாக இருந்து இந்த தேர்தலில் பாஜகவால் கழற்றி விடப்பட்ட அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவர்களுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இரண்டு கிங் மேக்கர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் ஏஜேஎஸ்யூ கட்சியும், ஜேவிஎம் கட்சியும் கிங் மேக்கர்களாக உருவெடுத்திருக்கின்றனர். ஏஜேஎஸ்யூ கட்சியை பாஜக உதறியதால்தான் இப்போது அது திணறியுள்ளது. அதேசமயம், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வேலைகளில் இப்போதே இறங்கி விட்டது.

மராண்டி ரெடிதான்
இதற்காக பாபுலால் மராண்டி மற்றும் ஏஜேஎஸ்யூ தலைவர் சுரேஷ் மஹதோ ஆகியோரை அது தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாஜகவுடன் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க தாங்கள் தயார் என்று பாபுலால் மராண்டி கூறியுள்ளார். எனவே அக்கட்சியுடன் இணைந்து பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முயற்சிக்கலாம். மராண்டியும் சில பல பேரங்களுக்குப் பின்னர் ஆதரவு தர முன் வருவார் என்றே தெரிகிறது.

இழுக்கும் முயற்சிகள்
அதேபோல கழற்றி விட்ட மாணவர் யூனியன் கட்சியையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் பாஜக தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே இந்த இரு கட்சிகளையும் தன்பக்கம் இழுத்து விட்டால் பாஜகவுக்கு எளிதாக பெரும்பான்மை பலம் கிடைத்து விடும். எனவே இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.

சித்து விளையாட்டுகள்
அதேசமயம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் டஃப் பைட் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியும் இரு கட்சிகளையும் இழுக்க முயற்சிக்கும். அவர்களுக்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. எனவே ஜேவிஎம் மற்றும் ஏஜேஎஸ்யூ ஆகியோருக்கான கிராக்கி தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ஏஜேஎஸ்யூவுக்கான கிராக்கிதான் மிக மிக அதிகமாக உள்ளது. காரணம் ஜேவிஎம்மை விட இக்கட்சிக்குத்தான் கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால்.
-
கூட்டணி ஆட்சி முழக்கம் மொத்தமா மங்கிப் போச்சு.. காங்கிரஸ் தலைகளுக்கு செக் வைத்த திமுக! -
என்கிட்ட கேட்காம.. அறிவாலயம் போகாதீங்க.. கோபப்பட்ட ராகுல்.. கடைசியில் வேண்டா வெறுப்பாக சம்மதம்? -
காங்கிரஸுக்கு 28+1! மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான்! ஆனாலும் தியாகம் செய்யணுமே! சலித்துக் கொண்ட சோடங்கர்! -
ஆறாத கோபக் கனல்.. கூட்டணி உறுதிதான்.. ஆனால் ராகுல் காந்தி மீது செம கடுப்பில் திமுக தலைகள்.. ஏன்? -
"All Finished"! அந்த சைகையை நான் திட்டமிட்டு காட்டவில்லை! ஸ்டாலின் விளக்கம்! -
எனக்கே ஸ்கெட்சா? ராகுலை மதிக்காத காங்., சீனியர்கள்! கிறிஸ்டோபரை களமிறக்கி செக்! இனி ஜுனியர்கள் காலம் -
5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. தெலுங்கானாவில் இருந்து MP ஆகும் அபிஷேக் சிங்வி! -
காங்கிரஸ் 28 வாங்கி என்ன பிரயோஜனம்.. 8 கூட வராது.. திமுக செய்யப் போகும் சம்பவம்! திருச்சி சூர்யா -
நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா! -
Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர! -
காமராஜர் ‘கே பிளான்’: திமுக வளர்ச்சியை தடுக்கவா? உட்கட்சி எதிரிகளை ஒடுக்கவா? -
ஜெயிலையே பார்த்துட்டேன்.. இனி என்ன பயம்? அமித்ஷா தரப்பிற்கே பணியாத சசிகலா.. பறக்கும் பாஜக ஆஃபர்கள்












Click it and Unblock the Notifications