96% பேர் டெபாசிட் காலி- கேஜ்ரிவாலின் சிறைவாசம் ஆம் ஆத்மியின் டெபாசிட்டை காப்பாற்றுமா?
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் சிறைவாசம் ஆம் ஆத்மி கட்சிக்கு வருங்காலத்தில் டெபாசிட்டை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் 96 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்திருந்தனர்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 434 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. 96 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். அக்கட்சியிலிருந்து கேப்டன் கோபிநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாஜகவின் நிதின் கட்கரியை ஊழல்வாதி என்று குறிப்பிட்டு பட்டியல் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தொடர்ந்து மான நஷ்ட வழக்கில் ஜாமீன் அளிக்க ரூ.10 ஆயிரத்தை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதை செலுத்த மறுத்ததால் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூ.10 ஆயிரம் என்பது கேஜ்ரிவால் கட்சிக்கு ஒரு பெரிய தொகை கிடையாது. ஆனால் சிறை வாசத்தை வலிய பெற்றுக்கொண்டார் கேஜ்ரிவால். இதன் மூலம், சோர்ந்து கிடந்த ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் 'தியாகி' என்ற பட்டப்பெயரை பெற்று கட்சியினரை உசுப்பிவிடலாம் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.
கேஜ்ரிவால் இன்று சிறைவாசத்தை முடித்துவிட்டு வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளார். கேஜ்ரிவாலின் சிறைவாசம் வரும் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு டெபாசிட்டை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications