அரசியலுக்கு வருவீர்களா?: ரஜினி மாதிரியே பதில் அளித்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றே பதில் அளித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் நம் நாட்டிற்காக செய்யும் வேலை எளிது அல்ல. அவரை எதை செய்தாலும் அது நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதாகவே இருக்கும் என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அரசியல் வாழ்க்கையை துவங்குவீர்களா என்று கேட்டதற்கு ஐஸ் கூறுகையில், நான் ரொம்ப பிசியாக உள்ளேன். தாய், மனைவி, மகள், நல்ல குடிமகளாக உள்ளேன் என்றார்.
அரசியலுக்கு வருவேன் என்றும் கூறவில்லை, வர மாட்டேன் என்றும் தெரிவிக்கவில்லை. வரும் 20ம் தேதி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ரிலீஸாக உள்ள சரப்ஜித் படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.












Click it and Unblock the Notifications